
இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.
இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால்
மூடி மறைக்க கூடிய சதி வேலைகளும் முதன்மையாக நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக இசுலாமியர்கள் தேச விடுதலைக்கு இயற்றிய தொண்டு வெளிச்சத்திற்கு வராமல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய சமயசார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட சில சகோதரர்கள் வெளிக்கொணர படாத இந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற புனித நோக்கோடு அல்லும் பகலும் வியர்வை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் உழைப்பு வீணாகாமல் இருக்க, காணாமல் போன வரலாற்றுக் கதாபாத்திரங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று, இந்திய சமயசார்பின்மை நிலைநாட்ட உதவிட வேண்டும் என்ற நோக்கோடு இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.
தமிழக ஆங்கிலேயே சிப்பாய்கள் ஆங்கில அரசிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களின் ஆணைக்கு இணங்கி அமைதியான முறையில் செயல்பட்டதாக நீண்ட நாட்களாக நம்பப்படுகிறது. சென்னை ஆவணகாப்பகத்தில் இருக்க கூடிய ஓரு ஆவணம் இந்த நம்பிக்கையை தகர்த்து எரிகின்றது. தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 9வது பட்டா¬யன் படையை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆங்கில அரசு 1775ல் முடிவு செய்திருந்தது. இந்த முடிவை எற்க மறுத்து இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்கியவர் மக்தும் சாஹிப் என்பது ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டது. ஆங்கில அரசு அவருக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்து, கேப்டன் கெல் என்கிற ஆங்கில அதிகாரி 900 சிப்பாய்கள் முன்னிலையில் மக்தும் சாஹெப்பை இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார். வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டிய இந்த தகவல் ஆவண காப்பகத்தில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 1806ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் திப்பு சுல்தானின் வாரிசுகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இயற்றிய குறிப்பிடத்தக்க பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அந்த சிப்பாய் கலகத்தில் பங்கேற்றதன் காரணமாக ஆங்கில அரசு இசுலாமியர்களை சந்தேகத்துடன் நோக்கினார்கள் என்பது ஃர்ம்ஸ் என்ற ஆங்கில அதிகாரியின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த புரட்சியில் பங்கேற்றதன் எதிரொலியாக ஆங்கில இராணுவத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல இசுலாமியர்கள் சென்னையிலும் வேலூரிலும் சிறை வைக்கப்பட்டனர். சிலர் காடுகள் நிறைந்த தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.1806ல் எற்பட்ட எழுச்சியும், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பும் பரவலாக இன்று அறியபட்டாலும், 1839ல் வேலூர் முஸ்லிம்கள் மீண்டும் ஓரு எழுச்சிக்கு தீவிரமாக திட்டமிட்டு அது தோற்றுப்போன வரலாறு பலருக்கு தெரியாத செய்தியாக இருந்து கொண்டு இருக்கிறது. 1806க்கு பிறகு பல இஸ்லாமிய மௌல்விகளும், பக்கீர்களும் வட இந்தியாவில் இருந்து வேலூருக்கு குடிபெயர்ந்தனர். இந்த மௌல்விகளும், பக்கீர்களும் வேலூர் பகுதியில் ஆங்கில விரோத தீயை பற்ற வைத்து கொண்டிருந்தனர். அந்த கால கட்டங்களில் ஜøம்மா பயான்கள் ஆங்கில அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளை ஊருவாக்க கூடியதாக இருந்தன.
புரஹா ஷா என்கின்ற பக்கீர் வேலூரில் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து வேலூரில் தங்கி இருந்த மௌல்விகளுக்கும், பக்கீர்களுக்கும் ஆஜ்மீர் நகரில் இருந்த ஆங்கில அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த தொடர்பும், வேலூர் முஸ்லிம்கள் 1839ல் கிளர்ச்சி செய்ய தீட்டிய திட்டமும் வெளியானது. அதே போல் அதே கால கட்டத்தில் வேலூர் பக்கீர் காதர் மீரா என்பவர் கைது செய்யப்பட்டபோது வேலூர் முஸ்லிம்களுக்கும், சென்னை பல்லாவரத்தில் இருந்த ஆங்கில எதிர்ப்பு சிப்பாய்களுக்கும் இருந்த தொடர்பும் அவர்கள் சதித்திட்டத்திற்காக இணங்கி செயல்பட்டது தெளிவானது. அதே வேளையில் வேலூரில் ஆங்கில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகத்ததற்காக லத்தீப் சாஹிப் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சூழ¬ல் வேலூரில் இருந்து வெளிவந்த சுல்தானா அக்பர் என்கின்ற தினசரி பத்திரிக்கை ஆங்கில விரோத கருத்துக்களை முஸ்லிம்கள் மத்தியில் பதிய செய்தது. ஆக வேலூர் முஸ்லிம்கள் 1806 க்கு பிறகும் ஆங்கில அரசுக்கு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வேளையில் தேசியம் செழித்து வளர வித்திட்டன என்பது உறுதியாகிறது.
1857 புரட்சியின் பாதிப்புகள் தமிழகத்தை எட்டவில்லை என நீண்ட நாட்களாக போதிக்கப்பட்டு வந்தது. இதனால், சமீபகாலமாக தமிழகத்திலும் 1857ன் எழுச்சியின் பிரதிபழிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த காலகட்டத்திலும் தமிழக முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்துள்ளனர் என்பது அறிந்து பெருமை பட வேண்டிய செய்தி மட்டும் ஆல்ல அதை இசுலாமிய சகோதரர்களிடம் கொண்டு சென்று இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்டவர்களில் இசுலாமியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

1869ல் கூட வேலூர் நகரத்தில் கலவர சூழ்நிலை இருந்ததாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 20 வது பட்டாயன் வேலூரில் தங்கி இருந்த ஐரோப்பியர்களை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு இருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் தற்காப்புக்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளக் கூடிய உரிமை வழங்கப்பட்டது என்பது அரசு உவணங்களில் பதிவாகியுள்ளது.
ஆக இசுலாமியர்கள் இந்திய தேசியவாத எழுச்சியின் தொடக்கம் முதல் சுதந்திர போராட்டத்தின் பல்வேறு கட்டங்களிலும் தங்களின் வீரத்தை விதைத்து போராடி, தியாகித்து, இரத்தம் சிந்தி அந்த இயக்கத்தை வளர்த்து இருக்கின்றனர். இதில் தமிழக முஸ்லிம்கள் முண்ணணியில் இருந்தார்களேயல்லாமல், இரண்டாம் இடத்தில் இருக்கவில்லை. இது முஸ்லிம்கள் பெருமை கொள்ள வேண்டிய, அறிந்து பெருமைப்பட வேண்டியதன்றோ!
No comments:
Post a Comment