கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ. மு.இ. முஹம்மது இர்ஷாத் (26), அணுமின் நிலையத்தால் கடல் வாழ் உயிரினம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைகழகத்தில் 4-1-2012 அன்று தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைகழகத்தில்ஆராய்ச்சியாளராக
பணியாற்றி வருகிறார். இவர் 4-1-2012 அன்று தமுமுக தலைமையகத்துக்கு வருகை தந்து தமுமுக நிர்வாகிகளை சந்தித்தபோது அப்போது அவருக்கு தமுமுக துணை பொதுசெயலாளர் ஜே எஸ் ரிபாயி, மாநில செயலாளர் பி எஸ் ஹமீது ஆகியோர் வாழ்த்து கூறினர். தென்சென்னை மாவட்ட தமுமுக - மமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment