TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday 2 January 2012

த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி சேர்ந்தவர்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி


தானே புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு தொலைத்தொடர்புகள் பெரிதும் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள் அறுந்து விழுந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ,பெரும்பாலான வீடுகள்,கடைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர தமுமுக வினர்
மமக 8  வது வார்டு நகரமன்ற உறுப்பினரும் நகர தமுமுக தலைவருமான அப்துல் ரஹீம் தலைமையிலும்,மமக 22 வ்து வார்டு நகர மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட தமுமுக சுற்று சுழல் அனி செயலாளர் ஹிசைன் தலைமையிலும்,21 வது வார்டு நகர மன்ற உறுப்பினரும் நகர மமக துனை செயலாளர் முஜீபுரஹ்மான் தலைமையிலும் அவசர உதவிகளை செய்து வருகிண்றனர்
புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகின்றனர். தானே புயலில் நெல்லிக்குப்பம் பண்ருட்டி நகரம், பூங்குணம், ஒறையூர் துணைமின்நிலைய பகுதியில் உள்ள பண்ருட்டி நகரம், தொரப்பாடி பேரூராட்சி, அண்ணாகிராமம், வீரப்பெருமாநல்லூர், கந்தன்பாளையம், சித்திரைசாவடி, கண்டரக்கோட்டை, தட்டாம்பாளையம், பனிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, திருவதிகை பகுதிகளில் ஆயிரம் மின்கம்பங்களும், 40க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் அடியோடு சாய்ந்துள்ளன.
இதனை சீரமைக்கும் பணியில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முதல் 

ஈடுபட்டுள்ளனர். ஆனால் புயலில் மாவட்டத்தில் மற்ற நகரங்களை விட 

பண்ருட்டி தாலுக்காவில் மின்கோபுரம், மின்கம்பங்கள் சேதம் அதிகம் 

என்பதால் அதனை சீரமைக்க திணறி வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய 

அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பண்ருட்டி தாலுகாவில் புயல் சேதம் காரணமாக பூங்குணம், ஒறையூர், 

மேலப்பாளையம் நகர துணை மின்நிலையங்களுக்கு நேற்று பிற்பகல் வரை 

110 கே.வி.,யில் மின்சாரம் பெற முடியவில்லை. துணை மின்நிலையத்திற்கு 

சப்ளை பெற்றாலும் ஆங்காங்கே உள்ள பழுதுகளை நீக்கினால் மட்டுமே 

மின்சாரம் வழங்க முடியும். இந்த பழுதுகளை நீக்கிட போதுமான ஊழியர்கள் 

இல்லை. பாதிப்பை சீரமைக்க போதுமான ஊழியர்கள் இருந்தால் மட்டுமே 4 

நாட்களில் சப்ளை வழங்கிட முடியும் என்றார்

த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி சேர்ந்தவர்கள்,இலவசமாக 

ஒவ்வொரு வீடுகளுக்கு சமையல் 

பொருட்கள்,மேலுகுவத்திகள்.தண்ணீர் 

போன்ற உதவிகளை செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar