நெல்லை மேலப்பாளையம் சந்தை அருகே உள்ள மதுக்கடையை அகற்ற மனிதநேய மக்கள் கட்சி கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டர் செல்வராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மேலப்பாளையத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலப்பாளயத்தின் சந்தை முக்கு ஆறு முனை சந்திக்கும் பகுதியாகும்.கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் இந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் செல்கின்றனர்.
இந்த முக்கிய சந்திப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை அருகேதான் பேருந்து நிலையம் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பாரை உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment