ஏர்வாடியில் தமுமுக மார்க்க பிரசார அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஏர்வாடி தமுமுக துணை தலைவர் கமால் தலைமை வகித்தார். மமக துணை செயலாளர் சேக்பீர் முஹம்மது வரவேற்றார்.
அப்துல் மஜிது மஹ்லரி "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பிலும், தமுமுக. உலமாக்கள் அணி மாநில செயலாளர் S.P. யூசுப் "அற்புத மார்க்கமும் அனாச்சாரங்களும்" என்ற தலைப்பிலும் , தமுமுக கிளை தலைவர் பக்ரூதின், மமக இளைஞர் அணி செயலாளர் சாஹிபு ஆகியோரும் மார்க்க உரையாற்றினர்.
No comments:
Post a Comment