அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கத்தா ஒன்றில்அமைந்துள்ள ஜும்மா பள்ளியில் வைத்து மதியம் 1 மணிக்கு இறைவன் அருளால் சகோ. வலங்கைமான்அப்துல்ரஹீம்அவர்கள் தலைமையில் நடந்தது மண்டல தலைமை நிர்வாககுழு உறுப்பினர் சகோ.கூனிமேடு அமானுல்லாகான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார் .சகோ ஈரோடு அபுதாகிர் அவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம்தொடங்கியது.
"மக்கள் சேவையில் தமுமுக" ன்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ, பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் ,கானகிளியனுர்அன்வர் அலிஅவர்கள் "வருங்கால சமுதாயம்" என்ற தலைப்பிலும்சிறப்புரையாற்றினர்கள். இளையான்குடி சீனிமுஹம்மத் அவர்கள் நன்றிஉரையுடன் தூஆ ஓதி ரிக்கா கிளை புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டு இனிதாக கூட்டம் முடிவு பெற்றது. கூட்டத்தில் கைத்தான் கிளை பொருளாளர் திருமங்கலம் இலாஹிபக்ஸ் மிஸ்ரிப் தமுமுக ஷேக்பாரித் ,வேலூர் அதாவுல்லா ,மற்றும் தலைமை நிர்வாககுழு பெரம்பலூர் இஸ்மாயில் கூனிமேடு சர்புதின் முஹம்மத்பாருக்ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தை கைதான்கிளை தமுமுக வினர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.
ரிக்கா தமுமுக புதிய நிர்வாகிகள்:
தலைவராக வலங்கைமான் அப்துல்ரஹீம்,
செயலாளராக அப்துல்லாஹ்,
பொருளாளராக முஹம்மத் ரபிக்,
துணைத்தலைவராக சையதுஅபுதாகிர்
ஆகியோர் நியமிக்க பட்டனர்
No comments:
Post a Comment