நாகை வடக்கு மாவட்ட த மு மு க செயலாளர் எருக்கூர் புகாரி மீது நேற்று
இரவு (13 04 2012 ) கொலைவெறி தாக்குதல் நடைப்பெற்றது .சீர்காழி அரசு
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் .தாக்குதல் நடத்திய சமூக
கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . மாநில உலமா அணி
செயலாளர் காரைக்கால் மவ்லவி யூசுப் எஸ். பி. காரை மாவட்ட முன்னாள்
தலைவர் லியாகத் அலி,காரை மாவட்ட முன்னாள் துணை தலைவர்
சாஜஹான்,காரை நகர முன்னாள் செயலாளர் அக்பர்ஷா ,காரை ராஜாத்தி
நகர் கிளை முன்னாள் தலைவர் பைசல் ஆகியோர் சீர்காழி அரசு
மருத்துவமனை சென்று தாக்குதலுக்கு உள்ளான மாவட்ட செயலாளரை
சந்தித்து ஆறுதல் கூறினர்.மாநில உலமா அணி செயலாளர் காரைக்கால்
மவ்லவி யூசுப் எஸ். பி. தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்
பணியை துரிதப்படுத்தினார் .மாநில தலைமைக்கும் ,மாவட்ட
பொறுப்பாளருக்கும் தகவல் தந்ததுடன் கொதித்து போய் நின்ற த மு மு க
நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் அமைதிப்படுத்தினார். சகோதரர்
புகாரி பூரண குணமடைந்து இந்த சமுதாயத்திற்க்கு மேலும் சேவைகள்
புரிந்திட துவா செய்வோம்.
No comments:
Post a Comment