கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்த இந்த சகோதரியைப்பற்றிய தகவல் கிடைத்தவுடன் மீட்கும் பணியில் தமுமுக தீவிர களத்தில் இறங்கியது. மத்திய மாநில அரசுகளின்
கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தமுமுகவுடன் Pleaceindia வும் இணைந்து இந்தியத்தூதரக அதிகாரிகளுடன் மனித உரிமை ஆணையம் ஹைல் கவர்னரேட் காவல்துறை உயர் அதிகாரிகள் போன்ற அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் அந்த சகோதரரியின் வழக்கில் தீர்வு கிடைத்துள்ளது.70ஆயிரம் சவூதி ரியால்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கிய ஸ்பான்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில பேப்பர் வேலைகள் பாக்கி உள்ளன. முழுமையாக முடிவடைந்தவுடன் இன்ஷா அல்லாஹ் தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும்..
ரியாத் மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மணிமகுடமாகும்...... எல்லாப்புகழும் இறைவனுக்கே...
No comments:
Post a Comment