த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் 19 வது வார்டு என்.எம் தெரு கிளை சார்பாக கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மக்களுக்கு தினமும் மோர் வழங்க இருக்கிறது.
03/04/2011 செவ்வாய் கிழமை த.மு.மு.க மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் நீர்மோர் பந்தலை துவங்கிவைத்து மக்களுக்கு மோர் கொடுத்தார்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம்,மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா,மாவட்டசெயலாளர்(ம.ம.க) பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் மற்றும் கிளை தலைவர் ரியாஸ் அஹமது ,கிளைசெயலாளர் சகாபுதீன்,கிளை பொருளாளர் கமாலுதீன், செயலாளர்(ம.ம.க) மீராஷா ஆகியோர் உடனிருந்தர்.நீர்மோர் பந்தலால் மக்கள் பெரிதும் பயனடைந்தார்கள்.
No comments:
Post a Comment