அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக
மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும்
"வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி
பகுதியில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
10 வது ஆண்டாக இந்த வருடமும் 7 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 8ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டது.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் 700௦௦௦ பேரும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 1200௦௦ பேரும் இந்த கல்வி முகாம் மூலம் பயன் அடைந்தனர்.
இந்த முகாமினை சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு.D. கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். தமுமுகவின் மாநில செயலாளர் மௌலா நாசர் அவர்களின் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் K.A.M. சைபுல்லாஹ், சாத்தணி சிராஜுதீன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் ஜெயினுலாபிதீன், தமுமுக நகர தலைவர் துல்கருணை சேட், பொருளாளர் செய்யது மகபூப், கான்சா சிராஜ், ஹக்கீம், கான்சா ஜமால், பைசல், அப்துல் ரசீது, தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் சேக் இப்ராஹீம் ஆகியோர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியில் இம்முகாம் பற்றிய மாணவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
No comments:
Post a Comment