லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 5ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் தமுமுக வின் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகளிலும், மழைகாலங்களிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அணைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருவதோடு மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.{அல்ஹம்துலில்லாஹ்}
சில நாட்களுக்கு முன்பு பாண்டிசேரி மருத்துவமனைக்கு சென்று திரும்பும் வழியில் லால்பேட்டை ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி வாகனம் சேதம் அடைந்தது மேலும் இந்த வாகனம் வாங்கி 5 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆம்புலன்ஸை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் வாங்க நகர நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது .
லால்பேட்டை த.மு.மு.க. .சகோதரர்களே ஆம்புலன்ஸ் சேவைகள் தொய்வின்றி தொடர உங்களது நன்கொடைகளை எங்களுக்கு அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், லால்பேட்டை நகரம்.
தலைவர் :முஹமது ஹாரிஸ் ,பொருளாளர் :A.இர்பானுல்லாஹ். BE
No comments:
Post a Comment